கைமாற்றி கொண்டேன்
கற்பனைகளை
திசைமாற செய்தேன்திறமைகளை
தினம் ஒன்றாய் தேடுகிறேன்
தீதும் நன்றும் பிறர்தர வார
என்பதை உணர்கிறேன்.
சிந்தனை,
சொல், செயல் மூன்றும்
ஒன்றாய் இணைக்க துடிக்கிறேன்.
முடியாது என்பது
முயற்சியின் கல்லறையாகும்
நடக்காது என்பது
நாளையின் கேள்விக்குறி
தெரியாது என்பது
தோல்வியின் வளர்ச்சி - இவைகளை
இப்பொழுதுதான் புரிந்துகொண்டேன்
விழித்துக்கொண்டேன்.
No comments:
Post a Comment