Pages

Saturday, November 27, 2010

மீண்டும் வரவேற்கிறது

                     கார்த்திக் இறந்து சிலவினாடிகள் தான் ஆகிறது,  அவன்  உயிர்(ஆன்மா) மேலோகம் செல்கிறது, மேலோகம் அடைந்ததும் அது உருவம் பெறுகிறது. வாயிற்படியில் இருவர் பார்க்க கட்டுமஸ்தாக ஒரே போல் உடையில் இருக்கிறார்கள். வருபவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்ற விவரங்கள் பெற்றுக்கொண்டு கொள்ளப்படுகிறது பின்பு  அடையாளமாக அவர்கள் கழுத்தில் ஒரு ரிப்பன் அணியப்படுகிறது, அதில் உள்ள டாலர் போன்ற தகட்டில் 1,2,3,4,5,6,7 அல்லது +1,+2,+3 என்ற குறியீடுகளில் ஏதேனும் ஒன்று பொறிக்கப்படுகிறது. +3 தான் கடைசி  வாய்ப்பு. கார்த்திக்கின் டாலரில் +2 பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் வரவேற்பறையில் அழகான இரண்டு பெண்கள், அவர்கள் அவன் டாலரில் பொறிக்கப்பட்ட குறியீடை பார்த்து வழிசொல்கின்றனர். உள்ளே சென்ற கார்த்திக்கிற்கு  நேர்காணல் நடத்தப்படுகிறது. கார்த்திக் அங்கிருந்து மற்றொரு இடத்திருக்கு அனுப்பப்பட்டான், அங்கு அவனை மூவர் கொண்ட கூழு முன் நிறுத்தப்பட்டு  பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்பு அவன் முக்கியமான அரங்கிற்கு அழைத்துசெல்லப்பட்டான், அங்கு அவன் ஐவர் கூழு முன் நிறுத்தப்பட்டான். அவர்கள் அவனை பல கேள்விகள் கேட்டுவிட்டு "you have to learn more and you need more experience" என்று சொல்லி அனுப்பினார்கள். வெளியே வந்தவன் அந்த டாலரை பார்த்தான், அது சொன்னது "7 ஜென்மம் முடிந்து +2 ஜென்மமும் முடிந்து விட்டது" என்று. 7 ஜென்மம் முடிந்த சிலர் மட்டுமே வெற்றி பெற்றதை காணமுடிந்தது. டாலரை கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் திரும்பி பார்க்கிறான், அங்கு "சொர்க்கம் உங்களை மீண்டும் வரவேற்கிறது" என்று பொறிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment