Pages

Thursday, November 18, 2010

உயிரில் கலந்தது

ஒருமுறை உன்னை பார்க்கவே
என் கண்களும் கேட்குதே,
தினம் தினம் உன்னை
நினைக்கவே என் இதயமும் துடிக்குதே,
சாலை ஓரம் போகும்
பெண்களை பார்க்கும்பொழுது
உந்தன் ஞாபகமே
உயிர் உறைந்து போகிடுமே.
எங்கு உள்ளாய்
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
விடைகள் இல்லையே
அதற்கு விலையுமில்லையே.
வருடம் ஓடிப்போனது
பல முகங்கள் என்முன் நகர்ந்தது
சில முகங்கள் மறந்தும் போனது
உன் முகம் மட்டும் நினைவில் நின்றது
உயிரில் கலந்தது.

No comments:

Post a Comment