பஞ்சுமிட்டாய் கலரில்
இனிக்கவைக்கிறது அவள் புடவை
பார்க்கும்போதே மின்னல் போல்
மனதை தாக்கியது அவள் கண்கள்
அழகான சிரிப்பொலியில்
அடிமையாகி போனது என் காதுகள்
காற்றினில் இசையமைக்கும்
அவள் கை விரல் இடுக்கில்
சிக்கிகொண்டது என் உயிர்
அவள் நடந்து செல்கையில்
பின்னால் செல்கிறது மனம்
அவள் பாதங்கள் பார்த்தபடி
அவளின் ஒவ்வொரு அசைவிற்கும்
உவமை தேடுகிறேன்
பேசும் வார்த்தைக்கெல்லாம்
எதுகை மோனை யோசிக்கிறேன்
இருந்தும் அவளை பிடிக்கவில்லை
பலவருடத்திற்கு பிறகு
பலவருடத்திற்கு பிறகு
என்னை கவிதை எழுதவைத்துவிட்டால்.
No comments:
Post a Comment