மழையே போதும்
எவ்வளவு நாட்கள் நீ பெய்தாலும்
வெயில் கால வறட்சி எப்போதும் உண்டு.
எங்கள் மக்களுக்கு சேமிக்க தெரிந்தது
ஒன்றே ஒன்று தான் - அது
பணம் மட்டும் தான்.
ஒரு ரகசியம் உனக்கு தெரியுமா?
அவனவன் தாகம் தீர்க்க
பணம் கொடுத்து வாங்குகிறான் தண்ணீரை
அவனுக்கு சொந்தமானது என்று கூட தெரியாமல்.
நாங்கள் உன்னை சேர்ப்பதும்,
சேமிப்பதும் கடலில் மட்டும் தான்
விடுமுறை நாட்களில் குதுகலிக்க..
திருடர்கள்(அரசியல்வாதிகள்) பலர் காத்திருகிறார்கள்
மழைக்கால நிவாரண நிதியை திருட..
சாலை சீரமைப்பு பணிக்கான நிதியை திருட..
அதனால் போதும் - அவர்கள்
காட்டில் மழை வேண்டாம்.
No comments:
Post a Comment