Pages

Saturday, January 29, 2011

பிழை??

எழுத்துப்பிழை - எழுதுகோலின் குற்றமா?
எழுதியவனின் குற்றமா?
எழுதுகோல் எழுதியவனின் கையில் இருப்பதால்
அதுவும் குற்றவாளி ஆகிறது என்பதை விட
தண்டனையும் உடனே பெறுகிறது
எப்படி?
சில சமயம் அவன் பல்லால் கடிபட்டு,
சில சமயம் வேகமாக கிழே போடப்படுகிறது,
சில சமயம் மேசையில் குத்தப்படுகிறது,
இன்னும் சில சமயம்
உடைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment