என் ஒவ்வொரு இரவுகளிலும்
விழித்து கொள்கிறேன்
என் கனவுலகில் வாழ,
என் ஒவ்வொரு
பகலிலும் உறங்கிவிடுகிறேன்
இந்த நிஜவுலகில் வாழ,
கட்டாயத்தால் ஆசையை
அடக்குகிறேன் நிஜவுலகில்,
ஆசையை கட்டாயம்
ஆக்குகிறேன் கனவுலகில்,
எது உண்மை
எது பொய் என்று
எனக்கும் தெரியும்,
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு
நிஜமா இருந்தாலென்ன?
கனவா இருந்தாலென்ன?