அன்னைக்கு நான் அடிமை
அவள் கண் அசைவிற்கு நான் பொம்மை
இன்பத்தில் இருந்தாலும்
துன்பத்தில் இருந்தாலும்
இதயத்தில் என்றுமே அவள் தெய்வம்
அளவில்லாத பாசமும்
அடங்காத கோபமும்
உரிமையுடன் சேருமிடம் அவள்
பொய் என்று தெரிந்தாலும்
உண்மையாகவே ஏற்றுக்கொள்வாள்
பசி என்று சொல்லாமல் பார்த்துக்கொள்வாள்
பணம் இல்லை என்றாலும்
முகம் கோண மாட்டாள்
முடியாது என்ற வார்த்தை தெரியாது
நடிப்பு என்பது அவள் அறியாதது
நான் என்ற எண்ணம் கிடையாது
நாம் என்ற சொல்லின் உயிர்நாடி அவள்.