Pages

Tuesday, May 31, 2011

நான் அடிமை

அன்னைக்கு நான் அடிமை
அவள் கண் அசைவிற்கு நான் பொம்மை
இன்பத்தில் இருந்தாலும்
துன்பத்தில் இருந்தாலும்
இதயத்தில் என்றுமே அவள் தெய்வம்
அளவில்லாத பாசமும்
அடங்காத கோபமும்
உரிமையுடன் சேருமிடம் அவள்
பொய் என்று தெரிந்தாலும்
உண்மையாகவே ஏற்றுக்கொள்வாள்
பசி என்று சொல்லாமல் பார்த்துக்கொள்வாள்
பணம் இல்லை என்றாலும்
முகம் கோண மாட்டாள்
முடியாது என்ற வார்த்தை தெரியாது
நடிப்பு என்பது அவள் அறியாதது
நான் என்ற எண்ணம் கிடையாது
நாம் என்ற சொல்லின் உயிர்நாடி அவள்.

1 comment: