Pages

Thursday, June 30, 2011

சில பிரிவுகள்

சில பிரிவுகள்
நம்மை சுற்றி உள்ள 
உலகை மறைத்துவிடுகிறது
சில பிரிவுகள்
உலகம் நம்மை மறந்துவிட்டதாய்
நினைக்க தோன்றுகிறது
சில பிரிவுகள்
சிலுவையில் அறையப்படும் 
வலியை தருகிறது
சில பிரிவுகள்
சிந்தனைக்குள் புகுந்து சிரிகிறது
சில பிரிவுகள்
சத்தமில்லாமல் நிகழுந்துவிடுகிறது
சில பிரிவுகள்
இதயத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாக
கவிதையில் சொல்லப்படும் உவமையாக
பகலில் தோன்றிடும் கனவாக
காலையில் நிகழும் நிகழ்வாக
மாலையில் மறைந்திடும்

No comments:

Post a Comment