கனவுக்குள் என்னை பூட்டினாய்
கண்திறக்க நீயும் மறுக்கிறாய்
காதலா என்று கேட்டால்
இல்லை என்கிறாய்
துடி துடிக்கும் இதயம் உன்னிடம்
கேட்காத கேள்வி கேட்குமே
பதில் கூட தேவை இல்லை
புன்னகை போதுமே
நேற்று வந்த மேகம்
இன்றும் பார்கிறேன்
மழையாய் என் மேல் பொழிய
கடவுளை வேண்டினேன்
அந்த மின்னலை விடவும்
அவள் பார்வை வெளிச்சம் தந்ததே
அந்த வானவில்லின் வண்ணங்கள் எல்லாம்
அவள் ஆடையில் மறைந்ததே
நடைப்பாதையில் நடக்க
அனுமதி கேட்கிறேன்
நடுரோட்டில் எனை மறந்து
தானாய் நடக்கிறேன்
அவள் மூச்சிக்காற்றை தேடி
அவள் பின்னங்காலின் சுவடுகளில்
என் கருவிழி கலந்ததே
கடவுளிடம் வரமாய் கேட்க விஷயம் கிடைத்ததே!!!