நிலாவில் நிலாவில் நிலாவில்
நீ பிறந்தாயோ!!
கனாவில் கனாவில் கனாவில்
காதல் சொன்னாயோ!!
இது என்ன மாற்றம்
என் மனதுக்குள் ஏக்கம்
முதல் நாள் இறந்து
மறுநாள் பிறந்து
இயற்கையின் விதியை உடைக்கிறேன்
இரவில் விழித்து
பகலில் உன்னை பார்த்து
தூக்கத்தை தொலைக்கிறேன்
ஏதோதோ சொல்லவே என் உதடு ஏங்குதே
சொல்லாமல் போகவே கல்லறையில் உறங்குதே
காலையின் அதிசயங்கள் என்னை பார்த்து கேட்குதே
மாலையின் மயக்கங்கள் என்னை பார்த்து சிரிக்குதே
பேசாத நேரங்களில் எல்லாம் உன் ஞாபகமே
ஞாபகங்கள் மறைந்தாலும் சுவடுகள் என்னை கொல்லுதே!!