Pages

Tuesday, September 20, 2011

அழகாக பேசும் கண்கள்
அது எங்கே போனது இன்று
அறியாத எந்தன் மனமோ
அலை மோதி அழுதது இன்று
தூங்காத இரவுகள் எல்லாம்
துக்கத்தில் என்னை துளைக்க
துடிக்காத இதயம
இறுகிப்போனது.

Saturday, September 10, 2011

சுவடுகள் என்னை கொல்லுதே!!

நிலாவில் நிலாவில் நிலாவில்
நீ பிறந்தாயோ!!
கனாவில் கனாவில் கனாவில்
காதல் சொன்னாயோ!!
இது என்ன மாற்றம்
என் மனதுக்குள் ஏக்கம்
முதல் நாள் இறந்து
மறுநாள் பிறந்து
இயற்கையின் விதியை உடைக்கிறேன்
இரவில் விழித்து
பகலில் உன்னை பார்த்து
தூக்கத்தை தொலைக்கிறேன்
ஏதோதோ சொல்லவே என் உதடு ஏங்குதே
சொல்லாமல் போகவே கல்லறையில் உறங்குதே
காலையின் அதிசயங்கள் என்னை பார்த்து கேட்குதே
மாலையின் மயக்கங்கள் என்னை பார்த்து சிரிக்குதே
பேசாத நேரங்களில் எல்லாம் உன் ஞாபகமே
ஞாபகங்கள் மறைந்தாலும் சுவடுகள் என்னை கொல்லுதே!!

Tuesday, September 6, 2011

தாமதம்!!

சில நன்மைகள் தந்தது
பல வலிகளையும் கொடுக்கிறது
விருப்பங்களை மண்ணுக்குள் புதைத்தது
வளர்ச்சியில் வேகம் குறைந்தது
எதிர்பார்த்த எதுவும் எனதில்லை என்றானது
என் ஆசை என்னை ஏளனமாய் பார்க்கிறது
என் கனவு கற்பனையாகி கல்லறையில் 
என்னை அடைக்கிறது.