Pages

Thursday, December 8, 2011

கலந்தேனே (பிறை தேடும்)

கேள்வியின் கேள்வியாய்

என் காதல்
என்னில் வளர்ந்தது
புரியாத பார்வையில்
அது பதில் ஒன்றை கண்டது
அலை அலையாய் மேகங்கள்
அதில் உந்தன் சுவாசங்கள்
எனை என்னில் தொலைத்தேனே
உன்னில் நானும் கலந்தேனே

எழுதாத வார்த்தைகள்
ஒன்றாக சேர்ந்ததே
உன் பெயரை காட்டுதே
உண்மை ஒன்றை சொன்னதே
மழை துளியாய்
இமை விழுந்தாய்
உடையாமல் உள்ளிறங்கி
உயிருக்குள் உணர்கிறேன்  -
இதயம் இன்று தொலைக்கிறேன்

கவிதைகள் காதல் சொல்கிறதே
கனவுக்குள் கண்கள் தொலைகிறதே


உன்னுடைய தேடல்கள்
என் கண்களில் ரசிக்கிறேன்
என்னுடைய கோபங்கள்
உன் கண்களில் காண்கிறேன்
தூங்காத நேரங்கள்
உன் ஞாபக தூறல்கள்
எனை அடித்து செல்லுமே
உன்னில் என்னை சேர்க்குமே

இதுவரையில் நானும் இருந்தேனே
இமை பொழுதில் உன்னில் கலந்தேனே

No comments:

Post a Comment