நேற்று சொல்லாத காதல்
இன்று இல்லாமல் போனதோ
காற்றில் கேட்காத வார்த்தை
பொய்யாக ஆனதோ
ஒரு துளி மழையில்
பல துளி கலந்திருக்கும்
ஒவ்வொரு இதயத்திலும்
ஒரு வித சுமையிருக்கும்
தூக்கம் இல்லாத கண்ணில்
ஏக்கம் கலந்திருக்கும்
என்றும் சொல்லாத காதல்
உயிரில் கலந்திருக்கும்.
நாம் மறந்து போன சிலர்(எழுத்தாளர்கள்)
நம் முன்னால் நின்று பேசுவது போல் இருக்கிறது
அவர்களின் எழுத்துகளை படிக்கும்பொழுது
அவர்கள் மறையவில்லை
வாழ்கிறார்கள்
அவர்கள் உறங்கவில்லை
நம்மை எழுப்புகிறார்கள்
சாதாரண மனிதனாய்
நம்மில் ஒருவனாய் நடக்கிறார்கள்
சில சமயம் நம்மை வழி நடத்துகிறார்கள்
இவர்கள் மட்டுமே யார்முன்னும்
கைகட்டி நிற்பதில்லை
யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை
மரியாதைக்குரியவர்கள் - பணம் இல்லாவிட்டாலும்!!