Pages

Monday, January 23, 2012

யார் என்றால் எனகென்ன?

யார் என்றால் எனகென்ன
என் கைகள் 
எனக்கு உதவ மட்டுமே
பலர் கால்களை அமுக்குவதற்கு அல்ல
என் சிரிப்பு
என் உணர்வை வெளிபடுத்தவே
சிலர் பேச்சிக்காக அல்ல
என் கால்கள்
நான் நடப்பதற்கு
சிலரை வழிதொடர அல்ல
இந்த பிறவியில் நான் மனிதன்
நாய் அல்ல நக்கி சாப்பிட.

Monday, January 16, 2012

சொல்லாத காதல்

நேற்று சொல்லாத காதல்
இன்று இல்லாமல் போனதோ
காற்றில் கேட்காத வார்த்தை
பொய்யாக ஆனதோ
ஒரு துளி மழையில்
பல துளி கலந்திருக்கும்
ஒவ்வொரு இதயத்திலும்
ஒரு வித சுமையிருக்கும்
தூக்கம் இல்லாத கண்ணில்
ஏக்கம் கலந்திருக்கும்
என்றும் சொல்லாத காதல்
உயிரில் கலந்திருக்கும்.

Sunday, January 8, 2012

எழுத்தாளர்கள்!!

நாம் மறந்து போன சிலர்(எழுத்தாளர்கள்)
நம் முன்னால் நின்று பேசுவது போல் இருக்கிறது
அவர்களின் எழுத்துகளை படிக்கும்பொழுது
அவர்கள் மறையவில்லை
வாழ்கிறார்கள்
அவர்கள் உறங்கவில்லை
நம்மை எழுப்புகிறார்கள்
சாதாரண மனிதனாய்
நம்மில் ஒருவனாய் நடக்கிறார்கள்
சில சமயம் நம்மை வழி நடத்துகிறார்கள்
இவர்கள் மட்டுமே யார்முன்னும்
கைகட்டி நிற்பதில்லை
யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை
மரியாதைக்குரியவர்கள் - பணம் இல்லாவிட்டாலும்!!