Pages

Tuesday, December 11, 2012

பாரதி

பாரதத்தின் தீ
எரிந்தப்பொழுது எரிமலையாய்
மடிந்தபொழுதும் அனலாய்
தகதகத்து கொண்டிருக்கிறான்
"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்ற சாட்டையை வீசி
தன் தலைமுறைக்கு எதிரியாகி
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டினான்
எம் தமிழுக்கு தலைமகன்
இந்த தரணியில் பிறந்த திருமகன்
இவனை நேரில் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்க மறந்ததில்லை
இவன் போல் எவனும் இல்லை
இவனை விட பெரியோன் எவனுமில்லை

தைரிய தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
வாழ்க எம் பாரதி
வாழ்க தமிழ் !!