Pages

Thursday, September 16, 2010

துணிந்து எழுந்துவிட்டேன்

துணிந்து எழுந்துவிட்டேன் -
போருக்கு அல்ல
அவளிடம் காதலை சொல்ல.
கஜினி முகமது எத்தனை முறை
போருக்கு சென்றான் என்றும் தெரியாது,
நான் துணிந்து எழுவது
எத்தனை முறை என்றும் தெரியாது.
ஒன்று மட்டும் உறுதியாக
சொல்லலாம் - நான்
இன்றும் சொல்லபோவதில்லை.

பின்பு ஏன்?
அவள் அருகில் செல்வேன்
என் சுவாசக்காற்றை எதிர்நோக்கி
காத்திருந்தவள் போல்
என் பக்கம் திரும்புவாள்.

அவள் கண்கள் பார்ப்பேன் - அது
இந்த எதிர்பார்ப்பு பிடித்திருப்பதை சொல்ல.
சொல்லாமல் திரும்புவேன் - அவள்
புரிந்துக்கொண்டால் என்று.

2 comments: