Pages

Saturday, November 6, 2010

ரஜினி சொன்ன குட்டி கதை!!!

     இன்று(5-11-2010) இரவு(9 pm) சன் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பேட்டியில், ரஜினியிடம் குட்டி கதை சொல்லுமாறு கேட்கப்பட்டது. மிகுந்த யோசனைக்கு பின் ரஜினி சொன்ன குட்டி கதை இதோ:
            ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்ப படுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம்  ஆட்சி செய்யமாட்டாங்க.. 1 வருஷம் இல்ல 2 , 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு. போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."
            அதுமாதிரி ஒரு planning வேணும். அதுமாதிரி கலாநிதி சாரும், ஷங்கரும் பிளான் பண்ணி எந்திரன் எடுத்தாங்க.

1 comment: