Pages

Sunday, August 5, 2012

நண்பர்கள்

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!!
ஒவ்வொரு வருடமும் நண்பர்கள் தினம் கொண்டாடும் நாட்கள் மாறுகிறது, அந்த மாற்றம் நாட்களில் மட்டும் இருக்கட்டும், நட்பில் வேண்டாம். நண்பன் என்பவன்  நாளை உன் சரித்திரத்தை எழுதும்பொழுது உன் தாய், தந்தை, கடவுள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அல்லாமல் தவிர்க்கவே முடியாமல் அதில் இடம்பிடிக்கும் ஒருவனாக இருப்பான். அவன் எப்பொழுதும் உன் அருகில் இருக்கவேண்டும் என்றில்லை, தொடர்பில் இருக்கவேண்டிய அவசியமில்லை, வலைத்தளத்தில் தினமும் தகவல் பரிமாறிக்கொள்ள தேவையுமில்லை, ஆனால் அவன் இல்லாமல் உன் வாழ்க்கையையோ நீ இல்லாமல் அவன் வாழ்க்கையையோ எழுதவோ சொல்லவோ முடியாது. நட்பு என்பது காதலை விட பெரியது, உன் நண்பனிடம் எதை பற்றியும் பேசலாம், ஆனால் உன் காதலியிடமோ மனைவியிடமோ அப்படி பேச முடியுமானால் இத்தனை  விவாகரத்துகளை நம் தேசம் சந்தித்திருக்காது என நினைகிறேன். நட்பு என்பது நீங்கள் இந்த ஸ்டாப்பில் ஏறி அடுத்த ஸ்டாப்பில் இறங்கும் பேருந்து இல்லை, நண்பன் என்பவன் அந்த பேருந்தை ஓட்டும் ஒட்டுனருமில்லை. உங்கள் சுயநலத்திற்கு நட்பு, நண்பன் என்றெல்லாம் கூறி தயவு செய்து நட்பையும், நண்பனையும் இழிவு செய்யாதிர்கள். "நட்பு நம்மில் இருக்கட்டும், நண்பன் நமக்காக இருப்பான்."

No comments:

Post a Comment