Pages

Thursday, December 9, 2010

ஆல் இன் ஆல் அழகுராஜா, செந்தில், இம்சை அரசன்...

இம்சை அரசன்: யார் அங்கே?? யாரடா அங்கே?????
                              கொண்டு வாருங்கள் அந்த மூக்கு பொடியை.
                              உன் ஒருவனுக்கு மட்டும் தான் மூக்கு போடி தண்டனை, இனி மாட்டும்  அனைவர்க்கும் மிளகாய் போடி தண்டனை.
ஆல் இன் ஆல் அழகுராஜா: stop it... என்னடா இது.. சீ நாயே அவன அவுத்துவிடு.. யாரா இவன்..
இம்சை அரசன்: 2G spectrum ஊழல் செய்தவன் இவன் தான்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: யாரு.. இவன்.. ஹஹஅஹா... டேய் அவன் மூஞ்சிய பாத்தியா... இவன் சின்ன பையன்டா...
இம்சை அரசன்: ஐயோ நான் சொல்வதை நம்புங்கள், ஆதாரம் கிடைத்துவிட்டது.
ஆல் இன் ஆல் அழகுராஜா: டேய் நெசமாத்தான் சொல்றியா?
இம்சை அரசன்: ஆமாம் என்னை நம்புங்கள்.
ஆல் இன் ஆல் அழகுராஜா: எவ்ளோ பணம் டா?
இம்சை அரசன்: 1,76,000 கோடி....
ஆல் இன் ஆல் அழகுராஜா: என்னது... கோடியா? அதுவும் லட்சம் கோடியா?
இம்சை அரசன்: அதற்கும் மேல்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: ஐயோ யம்மா தல சுத்துதே.. இத நா deal பண்றேன்..
இம்சை அரசன்: சொல்லுங்கள்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா இருக்கற ஊர்ல ஊழலா... அதுக்கு தான் நா இருக்கேனே..
இம்சை அரசன்: அதற்கு தான் இவனுக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆல் இன் ஆல் அழகுராஜா: டேய் கொசு மண்டையா, இதெல்லாம்  ஒரு தண்டனையாடா..
ஆல் இன் ஆல் அழகுராஜா: எப்படி  பட்ட wheel'ku எப்படி bend எடுக்கணும்னு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா'க்கு தான் டா தெரியும், இப்போ எடுக்குறேன் பாரு bend'a...
ஆல் இன் ஆல் அழகுராஜா: sir sir, இந்த நாய்ங்ககிட்ட 1 ஒரு ரூபா கூட ஏமாத்த முடியல.. நீங்க எப்படி சார் இவளோ பெருசா அடிச்சிங்க? அந்த டகால்டி வேலைய எனக்கும் சொல்லுங்களேன்..
செந்தில்: அண்ணே..
ஆல் இன் ஆல் அழகுராஜா: who is the dog voice?? யார்டா குறுக்க பேசுறது..
செந்தில்: நான் தான் அண்ணே... யார்னே இது?
ஆல் இன் ஆல் அழகுராஜா: டேய் பேரிக்கா மண்டையா, 2G spectrum தெரியுமா உனக்கு?
செந்தில்: (முழிக்கிறார்).
ஆல் இன் ஆல் அழகுராஜா: உன்னக்கு எங்க தெரிய போகுது, நீ தான் மனுசனே இல்லையே...
இம்சை அரசன்: இவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
செந்தில்: அண்ணே நீங்க சொல்லுகனே..
ஆல் இன் ஆல் அழகுராஜா: யாரு நானு... இவன அப்படியே விடுங்க, election வர போகுது, ஒட்டு கேக்க வரப்ப 100, 200 கொடுப்பான் வாங்கிட்டு ஒட்டு போடுங்க..
கூட்டதிலிருந்து: நாங்க எல்லாம் படிச்சவங்க... பணம் வாங்கிட்டு ஒட்டு போடமாட்டோம்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: அயயயையோ யாரா அவன்.. இவரு IAS, அவரு IPS'su, டேய் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா, படிச்சவங்க பாதி பேருக்கு vote'a கிடையாது... இந்த voter id இருக்கே அதுவே பாதி பேர்கிட்ட இல்ல. அப்படியே vote'tu இருக்கறவனும் போடமாட்டன்.
செந்தில்: ஏன்னே?????
ஆல் இன் ஆல் அழகுராஜா: ஏனா அவங்கெல்லாம் ஒரே busy டா கோமுட்டி தலையா.. ஹஹஅஹஹா...

No comments:

Post a Comment