விழிகளில் அவள்
வரைந்து வைத்த ஓவியம் போல்
விழிகளில் அவள்
இரவில் தோன்றும் நிலவு போல்
விழிகளில் அவள்
கடலில் எழும் அலையாக
விழிகளில் அவள்
பிறந்த குழந்தையின் அழுகை போல்
விழிகளில் அவள்
இதமாய் வீசும் தென்றலாய்
விழிகளில் அவள்
அனலாய் கொதிக்கும் நெருப்பாய்
அர்த்தங்கள் மாறிய கவிதையாய்
தேடி சென்ற துன்பமாய்
கண்ணில் விழுந்த காயமாய்
கடவுள் தந்த பரிசாய்