சில பிரிவுகள்
நம்மை சுற்றி உள்ள
உலகை மறைத்துவிடுகிறது
சில பிரிவுகள்
உலகம் நம்மை மறந்துவிட்டதாய்
நினைக்க தோன்றுகிறது
சில பிரிவுகள்
சிலுவையில் அறையப்படும்
வலியை தருகிறது
சில பிரிவுகள்
சிந்தனைக்குள் புகுந்து சிரிகிறது
சில பிரிவுகள்
சத்தமில்லாமல் நிகழுந்துவிடுகிறது
சில பிரிவுகள்
இதயத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாக
கவிதையில் சொல்லப்படும் உவமையாக
பகலில் தோன்றிடும் கனவாக
காலையில் நிகழும் நிகழ்வாக
மாலையில் மறைந்திடும்